×

புதிய ரேஷன் கடை கட்டுமான பணிகளை தொடரக்கூடாது ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை, ஆக. 9: ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த முனீஸ்வரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:‘‘ஜம்புலிங்கபுரத்தில் சுமார் 150 குடும்பத்தினர் வசிக்கிறோம். எங்கள் பகுதியில் புதிய ரேஷன் கடை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கு கடந்த 2023ல் அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது போதிய இடம் இல்லை எனக் கூறி ஒரு கிமீ தூரமுள்ள பக்கத்து ஊரில் புதிய ரேஷன் கடையை கட்டும் பணி துவங்கியுள்ளது. எனவே, எங்கள் கிராம பகுதியிலேயே ரேஷன் கடையை கட்டுமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், எல்.விக்டோரியா கவுரி ஆகியோர், ‘‘தற்போது கட்டப்படும் ரேஷன் கடை கட்டுமானப் பணிகளை தொடரக் கூடாது. கட்டிடம் கட்டும் இடத்தை நிலையாக தேர்வு செய்து அங்கு கட்ட வேண்டும்’’ என்றனர். மேலும், மனுவிற்கு அரசுத் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆக.19க்கு தள்ளி வைத்தனர்.

The post புதிய ரேஷன் கடை கட்டுமான பணிகளை தொடரக்கூடாது ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Muneeswari ,Ottapidaram ,Jambulingapuram ,Dinakaran ,
× RELATED மதுரை மாநகராட்சி தூய்மைப்...