×

கோயில் திருவிழா பேனரில் ஆபாச நடிகையின் புகைப்படம்: காஞ்சிபுரம் அருகே பரபரப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே ஆடி வெள்ளியை முன்னிட்டு, நாகாத்தம்மன் மற்றும் செல்லியம்மன் கோயிலில் நடைபெறவுள்ள திருவிழாவிற்கு பிரபல ஆபாசபட நடிகை மியா கலிபா படத்துடன் பேனர் வைக்கப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காஞ்சிபுரத்தை அடுத்த குருவிமலை பகுதியில் உள்ள நாகாத்தம்மன் மற்றும் செல்லியம்மன் கோயிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு வளைகாப்பு விழா இன்று நடைபெறவுள்ளது. இதற்காக கிராம இளைஞர்கள் சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த பேனரில் 16 முதல் 18 வயதுக்குட்பட்ட 8 இளைஞர்கள் புகைப்படத்துடன் பிறப்பால் லெபனான் நாட்டை சேர்ந்த பிரபல ஆபாச பாலியல் நடிகை மியா கலிபா புகைப்படமும் இடம் பெற்றுள்ளது. மியா கலிபா மஞ்சள் உடையுடன் பால்குடம் எடுப்பதுபோல் பேனர் வைக்கப்பட்டுள்ளதால், இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்த தகவல் சமூக வலைதளமான பேஸ்புக்கில் வைரலானதால், காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சர்ச்சைக்குரிய வகையில் வைக்கப்பட்டிருந்த அந்த பேனரை அகற்றினர்.

The post கோயில் திருவிழா பேனரில் ஆபாச நடிகையின் புகைப்படம்: காஞ்சிபுரம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : temple festival ,Pandemonium ,Kanchipuram ,Mia Khalifa ,Nagathamman ,Chelliyamman ,Aadi ,Velli ,Kuruvimalai ,
× RELATED போலீசுக்கு பயந்து ஜன்னல் வழியாக...