×

பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு: 2 மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

உத்திரமேரூர், ஆக.9: உத்திரமேரூர் அருகே வேலைக்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் கத்திமுனையில் ஐந்தரை சவரன் தாலி செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.  உத்திரமேரூர் அருகே சித்தமல்லி கிராமத்தை சேர்ந்தவர் லோகம்மாள் (38). அதே கிராமத்தில் உள்ள கோமாதா எனும் மாடுகள் வளர்க்கும் பண்ணையில் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் அதிகாலை கோமாதா பண்ணைக்கு வேலைக்கு செல்வதற்காக, மருதம் சாலை வழியாக நடந்து சென்றுக்கொண்டிருந்தார்.

அப்போது, பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், லோகம்மாளை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, அவரை தாக்கி கழுத்தில் இருந்த ஐந்தரை சவரன் தாலி செயினை பறித்து தப்பி சென்றனர். இதுகுறித்து உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், லோகம்மாளை மீட்டு சிகிச்சைக்காக உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு: 2 மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Tags : Uthramerur ,Lokammal ,Chittamalli ,Uttaramerur ,
× RELATED உத்திரமேரூர் நூக்காலம்மன் கோயிலில் ஆவணி பவுர்ணமி பால்குட திருவிழா