×

திடீரென பிரேக் போட்டதால் மொபட்டில் இருந்து விழுந்து பெண் பலி

திருநின்றவூர்: திருநின்றவூர் திருமுருகன் நகர் விரிவாக்கத்தை சேர்ந்தவர் கோபிநாத். இவரது மனைவி சாமுண்டீஸ்வரி(58). இவரது மருமகள் உமாமகேஸ்வரி(35). நேற்று முன்தினம் உமா மகேஸ்வரி, மாமியார் சாமுண்டேஸ்வரியுடன் வெங்கல் பகுதிக்கு சென்றார். பின்னர், அவர்கள் இருவரும் மீண்டும் வீட்டுக்கு மொபட்டில் திரும்பி கொண்டிருந்தனர். இவர்கள் திருநின்றவூர்- பெரியபாளையம் சாலை, திருநின்றவூர் காவல் நிலையம் அருகே வந்தபோது திடீரென சாலையின் குறுக்கே எருமை மாடு ஒன்று கடக்க முயன்றது. இதனை பார்த்த உமா மகேஸ்வரி மாடு மீது மோதாமல் இருக்க, திடீரென்று பிரேக் போட்டு மொபட்டை நிறுத்தியுள்ளார். அப்போது மொபட்டில் பின்சீட்டில் அமர்ந்திருந்த சாமுண்டேஸ்வரி தவறி கீழே விழுந்தார். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.  அவரை மீட்டு உமாமகேஸ்வரி ஆவடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சாமுண்டேஸ்வரி பரிதாபமாக இறந்தார். புகாரின் அடிப்படையில், பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post திடீரென பிரேக் போட்டதால் மொபட்டில் இருந்து விழுந்து பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Thirunandavur ,Gobinath ,Thirunanavur Thirumurugan Nagar Extension ,samundieswari ,Umamakeswari ,
× RELATED திருநின்றவூர் – தாமரைப்பாக்கம் 4 வழிச்சாலை பணி மும்முரம்