×

பராசக்தி மாரியம்மன் கோயிலில் கூழ் ஊற்றும் நிகழ்ச்சி

தர்மபுரி, ஆக.7: தர்மபுரி டவுன் பாரதிபுரம் பராசக்தி மாரியம்மன் கோயில் கூழ் ஊற்றும் விழா நேற்று நடந்தது. தர்மபுரி டவுன் பாரதிபுரம் பராசக்தி மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நேற்று காலை 7 மணியளவில் மாரியம்மனுக்கு சக்தி கரகம் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து பகல் 3 மணியளவில் மாரியம்மனுக்கு கூழ் ஊற்றும் விழா நடந்தது. விழாவையொட்டி நூற்றுக்கணக்கான பக்தர்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபட்டனர். இதையடுத்து கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டனர். இன்று காலை பால்குடம் ஊர்வலம், மாலை 3 மணிக்கு மாவிளக்கு ஊர்வலமும், 8ம் தேதி மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

The post பராசக்தி மாரியம்மன் கோயிலில் கூழ் ஊற்றும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Parasakthi Mariamman temple ,Dharmapuri ,Parasakthi ,Mariamman ,Temple ,Dharmapuri town ,Bharathipuram ,Bharathipuram Parasakthi Mariamman temple festival ,Shakti Karakam ,
× RELATED தருமபுரி தனியார் பள்ளியில்...