×

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

விருதுநகர், ஆக.6: குடும்ப பிரச்சனை காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சாத்தூர் அருகே போத்திரெட்டியபட்டியை சேர்ந்தவர் பொன்னுலட்சுமி(23). இவருக்கும் ஆனைக்குட்டத்தை சேர்ந்த ஆனந்தகுமாருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக பொன்னுலட்சுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆமத்தூர் போலீசில் தாய் இந்திராதேவி அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Ponnulakshmi ,Potrettypatti ,Chatur ,Anandakumar ,Anaikuttam ,
× RELATED சிவகாசி, கோவில்பட்டி பஸ்கள்...