×

மலைப்பாதைகளில் விபத்துகளை தடுக்க தானியங்கி எச்சரிக்கை ஒலிப்பெருக்கி கருவி பொருத்தம்

உதகை: தமிழ்நாட்டில் முதன்முறையாக மலைப்பாதையில் விபத்துகளை தடுக்க தானியங்கி எச்சரிக்கை ஒலிப்பெருக்கி கருவி பொறுத்தப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். கல்லாரப்பகுதியில் யானைகள் எளிதாக கடந்து செல்ல மேட்டுப்பாளையம் – ஊட்டி நெடுஞ்சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஊட்டி மலைப்பாதையில் கொண்டை ஊசி வளைவுகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் அதிகம் ஏற்படுவதாக தெரிவித்தார். இதனை சரிசெய்யும் வகையிலும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் போக்குவரத்து நிறைந்த உதகை மற்றும் மைசூர் செல்லும் சாலையில் உள்ள 7 கொண்டை ஊசி வளைவின் இரு முனைகளிலும் தானியங்கி அதி நவீன உணர் எச்சரிக்கை கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.எதிரெதிரே வாகனங்கள் வரும்போது இந்த அதி நவீன உணர் கருவி ஒலிபெருக்கி மூலம் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கும். அதேபோல கொண்டை ஊசி வளைவுகளில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையிலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எச்சரிக்கை வாசகங்கள் ஒளிரூட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post மலைப்பாதைகளில் விபத்துகளை தடுக்க தானியங்கி எச்சரிக்கை ஒலிப்பெருக்கி கருவி பொருத்தம் appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,Minister of ,Highways A.V. ,Velu ,Dinakaran ,
× RELATED மீன்பிடிக்க நீர் நிலைகளில் தண்ணீர்...