×
Saravana Stores

தேவதானப்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கரடி பலி

 

தேவதானப்பட்டி, ஆக. 2: தேவதானப்பட்டி அருகே காட்ரோட்டில் நேற்று முன்தினம் இரவு 5 வயது மதிக்கத்தக்க ஆண் கரடி ஒன்று சாலையை கடக்க முயன்றுள்ளது. அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி கரடி சம்பவ இடத்திலேயே பலியானது. அங்கிருந்தவர்கள் உயிரிழந்த கரடியை சாலை ஓரத்தில் இழுத்து போட்டு, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேவதானப்பட்டி போலீசார் மற்றும் பெரியகுளம் வனத்துறையினர் உயிரிழந்த கரடியை மீட்டு பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர். பெரியகுளம் அதனைச் சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப பகுதிகளில் கரடி இனமே அறியப்படாத நிலையில் பெரியகுளம் பகுதியில் தற்பொழுது கரடி சாலையை கடக்கும் என்று போது பலியான சம்பவத்தால் கரடி அப்பகுதியில் இருக்குமோ என்ற பொதுமக்களிடம் அச்சம் நிலவுகிறது.

 

The post தேவதானப்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கரடி பலி appeared first on Dinakaran.

Tags : Devadanapatti ,Devdhanapatti ,Gatrot ,Dinakaran ,
× RELATED தவறை தட்டிக் கேட்டவருக்கு அடி