×

மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தவர் பலி

திருப்பரங்குன்றம், ஆக. 1: திருப்பரங்குன்றம் பெரியரத வீதியில் சுப்பிரமணியசுவாமி கோயில் அருகே தனியார் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் சூர்யா தினேஷ் (44) என்பவர் கடந்த மூன்று மாதமாக கிளீனர் வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளதாக தெரிய வருகிறது. இந்நிலையில், மஞ்சள்காமாலை நோயால் அவதிப்பட்டு வந்த இவர், நேற்று காலை ஹோட்டல் மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பரங்குன்றம் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ேமலும் அவரது மரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தவர் பலி appeared first on Dinakaran.

Tags : Tiruparangunram ,Subramaniaswamy Temple ,Periaratha Road, Thiruparangunram ,Surya Dinesh ,Bali ,
× RELATED திருப்பரங்குன்றம் லட்சுமி...