×

வயநாடு நிலச்சரிவு; நிவாரணம், மீட்புப் பணிகளை விரைவுபடுத்தி அவசர மருத்துவ உதவிகளை வழங்க வேண்டுகிறேன்: மல்லிகார்ஜூன் கார்கே

கேரளா: வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வயநாடு அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது. முண்டக்கை, சூரல்மலை ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கியுள்ளன. மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 50-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தனது எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்தார். அதில், கூறியதாவது,

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால், பலர் சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலச்சரிவால் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அனைத்து நிறுவனங்களுடனும் ஒருங்கிணைந்து, நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர மருத்துவ உதவிகளை வழங்கவும் மாநில மற்றும் ஒன்றிய அரசுகளை நான் கேட்டுக்கொள்கிறேன்.

காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் மக்களுக்கு வழங்க வேண்டும். சோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்க மருத்துவர்கள், துணை மருத்துவர்களுடன் ஒருங்கிணைக்கவும் மற்றும் ஏஜென்சிகளுடன் தயவுசெய்து பின்தொடரவும்.இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

The post வயநாடு நிலச்சரிவு; நிவாரணம், மீட்புப் பணிகளை விரைவுபடுத்தி அவசர மருத்துவ உதவிகளை வழங்க வேண்டுகிறேன்: மல்லிகார்ஜூன் கார்கே appeared first on Dinakaran.

Tags : Vayanadu ,Landslide ,Mallikarjun Karke ,Kerala ,Congress ,President ,Wayanadu ,Wayanad ,
× RELATED வயநாடு நிலச்சரிவால் களையிழப்பு...