×

டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலி

 

ராஜபாளையம், ஜூலை 30: ராஜபாளையத்தில் டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் உயிரிழந்தார். ராஜபாளையம் தென்றல்நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் மகன் மாரிமுத்து(30). இவர் டிராக்டரில் வாழவந்தான் கண்மாயிலிருந்து மண் லோடு ஏற்றி வந்து கொண்டிருந்தார். நடுவக்குளம் கண்மாய் பகுதியில் வரும்போது டிராக்டர் நிலை தடுமாறி கீழே கவிழ்ந்தது.

இதில் அடியில் சிக்கிய மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் கிடைத்தவுடன் சேத்தூர் போலீசார் விரைந்து சென்று டிராக்டரின் அடியில் இருந்து மாரிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் சார்லஸ் விசாரணை செய்து வருகிறார்.

The post டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Rajapalayam ,Ganesan ,Marimuthu ,Thenar Nagar ,Kanmai ,Madhukulam Kanmai ,
× RELATED டிரான்ஸ்பார்மரில் தூக்குப்போட்டு மின்வாரிய அதிகாரி தற்கொலை