×

மாமல்லபுரம் பேரூராட்சி 15 வார்டுகளையும் திமுக, கூட்டணி கட்சிகள் கைப்பற்றவேண்டும்மாமல்லபுரம் பேரூராட்சி 15 வார்டுகளையும் திமுக, கூட்டணி கட்சிகள் கைப்பற்றவேண்டும்: செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

மாமல்லபுரம்: நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, மாமல்லபுரத்தில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில், நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மாமல்லபுரம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளையும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்ற வேண்டும் என ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசினார். வரவிருக்கின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, மாமல்லபுரம் நகர திமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் தனியார் கெஸ்ட் ஹவுசில் நேற்று மதியம் நடந்தது. கூட்டத்திற்கு, மாவட்ட பிரதிநிதி சண்முகானந்தம் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட துணை செயலாளர் வெ.விசுவநாதன், நந்தகோபால், முருகன், கணேசன், சுதா தேசமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர இளைஞரணி அமைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது, `பொங்கல் பண்டிகைக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. நடந்து, முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மாவட்டம் முழுவதும் 100 சதவீத வெற்றி பெற்றோம். அதேப்போல், நடைபெற உள்ள நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றியை கைப்பற்ற வேண்டும். நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் வெற்றிபெற்று திமுக மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்ததவர்கள் தலைவர் மற்றும் துணை தலைவர்களாக வந்தால் தான் சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள முடியும். இந்தியாவிலேயே, சிறப்பான ஆட்சியை நமது முதல்வர் செய்து வருகிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரூ.4 ஆயிரம் தருவேன் என்று சொன்னார். பின்னர், ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.4 ஆயிரத்தை வழங்கினார். அரசு பேருந்துகளில், பெண்களுக்கு இலவசம், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை வைத்திருந்தால் தள்ளுபடி செய்வோம் என்று சொல்லி தள்ளுபடி செய்தார். நம்மை யாரெல்லாம், விமர்சனம் செய்தார்களோ அவர்கள் எல்லாம் பாராட்டுகிற அளவில் நமது முதல்வர் ஆட்சி செய்கிறார். நடைபெற உள்ள, உள்ளாட்சி தேர்தலில் மாமல்லபுரம் பேரூராட்சி உள்ள 15 வார்டுகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் முழுமையாக கைப்பற்ற வேண்டும்’ இவ்வாறு அவர் பேசினார்….

The post மாமல்லபுரம் பேரூராட்சி 15 வார்டுகளையும் திமுக, கூட்டணி கட்சிகள் கைப்பற்றவேண்டும்மாமல்லபுரம் பேரூராட்சி 15 வார்டுகளையும் திமுக, கூட்டணி கட்சிகள் கைப்பற்றவேண்டும்: செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : DMK ,Mamallapuram Municipal Corporation ,Minister ,Tha.Mo.Anparasan ,Mamallapuram ,Mamallapuram Municipal Corporation DMK ,Thamo Anparasan ,
× RELATED பேரூர் திமுக சார்பில் திருவேங்கடத்தில் நீர்மோர் பந்தல்