×

வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

 

விருத்தாசலம், ஜூலை 29: விருத்தாசலம் சிதம்பரம் ரோடு பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜமூர்த்தி மகன் ரஞ்சித்குமார்(32). இவர் நேற்று விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டி எதிரில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு உணவு வாங்க சென்றுள்ளார். அப்போது அந்த உணவகத்திற்கு அருகே உள்ள டாஸ்மாக் கடையில் நின்று கொண்டிருந்த, கஸ்பா தெருவை சேர்ந்த ராஜா மகன் சிவராஜன்(22) என்பவர், குவார்ட்டர் வாங்குவதற்கு 100 ரூபாய் குறைகிறது என ரஞ்சித் குமாரிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு ரஞ்சித்குமார் பணம் இல்லை என்று சொல்லியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சிவராஜன், கீழே கிடந்த பீர் பாட்டிலை எடுத்து, ரஞ்சித் குமாரின் தலையில் அடித்து அசிங்கமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த ரஞ்சித்குமார் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இது குறித்து ரஞ்சித்குமார் கொடுத்த புகாரில் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Vridthachalam ,Ranjithkumar ,Rajamurthy ,Chidambaram Road Poontotam ,Vriddhachalam Market Committee ,
× RELATED மான் வேட்டையாடியவர் கைது