- கரூர்
- வில்லிவாக்கம்
- இன்ஸ்பெக்டர்
- பிரித்விராஜ்
- அஇஅதிமுக
- அமைச்சர்
- எம் ஆர் விஜயபாஸ்கர்
- பிரகாஷ்
- CBCID
- தின மலர்
கரூர்: கரூர் தொழிலதிபர் பிரகாஷிடம் ரூ.100 கோடி நிலத்தை மிரட்டி வாங்கியதாக அளிக்கப்பட்ட புகாரில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு, உடந்தையாக இருந்த வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் பிரித்விராஜ் கைது செய்யப்பட்டார். இவரை 2 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
2வது நாளாக நேற்று அவரிடம் விசாரணை முடிந்ததும் நேற்று மாலை அவரை கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்த அவரை ஜூலை 31ம் தேதி வரை சேலம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் சேலம் சிறைக்கு அழைத்து சென்றனர்.
The post ரூ.100 கோடி மோசடி: இன்ஸ்பெக்டர் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.