×

பள்ளிபாளையம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை


நாமக்கல்: பள்ளிபாளையம் காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வருவாய்த் துறையினர், நகராட்சி நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர பகுதிகளான ஜனதா நகர், மீனவர் தெரு, நாட்டான் கவுண்டன் புதூர் உள்ளிட்ட இடங்களில் ஒலிபெருக்கியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக மேடான பகுதிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post பள்ளிபாளையம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Pallipalayam ,Namakkal ,Cauvery ,Janatha Nagar ,Meenavar Street ,Natan Gaunton Budoor ,
× RELATED சொகுசு கார் மோதி சிறுவன் உள்பட 2 பேர் காயம்