×

பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

 

பெரம்பலூர், ஜூலை 27: பெரம்பலூரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாற்றுத்திறனாளிகளை வஞ்சித்து தாக்கல் செய்துள்ள ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்தும், மாற்றுத் திறனாளிகளை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியும் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய அமைப்பாளர் சக்திவேல் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் ராஜசேகர் கண்டன உரை யாற்றினார். மாவட்ட துணை அமைப்பாளர் செல்லமுத்து முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப் பாட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாது காப்பு உரிமைகளுக்கான சங்கத்தைச் சேர்ந்த 20 பேர் கலந்து கொண்டனர்.

 

The post பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Disabled ,Perambalur ,Tamil Nadu People with All Disabilities and Defense Rights Association ,Union government ,
× RELATED பள்ளியில் சர்ச்சை பேச்சு: மகாவிஷ்ணு...