×

ஆம்னி பஸ், டிரைவர் கிளீனரை தாக்கிய வழக்கு டிராவல்ஸ் உரிமையாளருக்கு வலை; 5 பேர் கைது

மதுரை: மதுரை தனியார் பஸ் நிறுவனத்தில் நாகர்கோவில் முதல் திருப்பதி வரையிலான பேருந்தை இயக்கும் டிரைவர் பாலகருப்பையா, கிளீனர், பயணிகளை பேருந்தில் ஏற்றி டிக்கெட் பணத்தை நிறுவனத்திற்கு தெரியாமல் எடுத்து விட்டதாக கூறி, டிராவல்ஸ் அலுவலகத்தில் உள்ளே வைத்து இருவரது கைகளையும் கட்டிப்போட்டு அடித்து விசாரணை நடத்தியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக டிரைவர் பாலகருப்பையா மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் கீழ் டிராவல்ஸ் உரிமையாளர் ராஜசேகர் மற்றும் அவரது நிறுவன ஊழியர்கள் உட்பட 8 மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் டிராவல்ஸ் நிறுவன ஊழியர்களான முத்துக்குமார், முருகேசன், செல்வம், சக்தி, சோலை ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவான நிறுவன உரியமையாளர் ராஜசேகர் மற்றும் ஊழியர்கள் 2 பேர் உட்பட 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post ஆம்னி பஸ், டிரைவர் கிளீனரை தாக்கிய வழக்கு டிராவல்ஸ் உரிமையாளருக்கு வலை; 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Omni Bus ,Travels ,Madurai ,Balakarupaiah ,Nagercoil ,Tirupati ,Madurai Private Bus Company ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் சுங்கச்சாவடி கட்டணம்...