×

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: கல்லூரி கல்வி இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25ம் ஆண்டிற்கான முதுநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் இன்று முதல் பதிவு செய்யலாம். தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் ஒரு மாணவருக்கு ரூ.58 பதிவுக் கட்டணம் ரூ.2 மட்டும், எஸ்.சி,எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை. பதிவுக் கட்டணம் ரூ.2/- மட்டும், கட்டணம் செலுத்தும் முறை: விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் டெபிட் கார்டு, கிரிடிட் கார்டு, நெட்பேங்கிங், யூபிஐ மூலம் இணையதளம் வாயிலாக செலுத்தலாம். கல்லூரிச் சேர்க்கை உதவி மையங்களில் “The Director, Directorate of Collegiate Education, Chennai-15” என்ற பெயரில் இன்று அல்லது அதற்கு பின் பெற்ற வங்கி வரைவோலை மூலமாகவோ, நேரடியாகவோ செலுத்தலாம். சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை இணையதளம் மூலும் அறியலாம். மேலும் 044-24343106, 24342911 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

The post தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government Arts and Science Colleges ,CHENNAI ,Arts and ,Tamil Nadu ,
× RELATED கும்பகோணம் அரசினர் கலை அறிவியல் கல்லூரி காலவரையின்றி கல்லூரி மூடல்