×

தண்ணீர் அண்டாவில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பரிதாப பலி

குலசேகரம்: குமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்துள்ள கல்லங்குழி பயித்தங்காலவிளை பகுதியை சேர்ந்தவர் நிம்மி பி.எம். ஜோஷி (30). கணவரை பிரிந்து ஒன்றரை வயது குழந்தையுடன் கல்லங்குழியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் குழந்தையை தாயார் மேபல் ரூபியிடம் விட்டு விட்டு நிம்மி ஜோஷி வேலைக்கு சென்றார். காலை 10.30 மணியளவில் குழந்தை வீட்டின் பின்புறம் விளையாடி கொண்டு இருந்தது. அப்போது அங்கிருந்த தண்ணீர் பாதியளவு நிரம்பிய சில்வர் அண்டாவில், குழந்தை தலைகுப்புற கவிழ்ந்து மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தது.

The post தண்ணீர் அண்டாவில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : KULASEKARAM ,Nimmi P.M. ,Kallanguzhi Phaithangalamavilai ,Tiruvattar ,Kumari district ,Joshi ,Kallanguzhi ,
× RELATED குலசேகரம் அருகே பரிதாபம் நீரில் மூழ்கி டிரைவர் பலி