×

தாம்பரம் பகுதியில் பராமரிப்பு பணி அந்தியோதயா ரயில் ஆகஸ்ட் 1 முதல் 14ம் தேதி வரை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தாம்பரம் பகுதியில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் அந்தியோதயா ரயில் ஆகஸ்ட் 1முதல் 14ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: தாம்பரம் பகுதியில், ரயில்வே பணிகளை மேம்படுத்தும் பணி நடைப்பெற்று வருகிறது. அதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தாம்பரம்-நாகர்கோவில் இடையே ரயில் எண்(20691) இரவு 11 மணிக்கு இயக்கப்படும் அந்தியோதயா ரயிலானது, ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கமாக, நாகர்கோவில் இருந்து மாலை 3.50 மணிக்கு தாம்பரம் புறப்படும், அந்தியோதயா ரயில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. வழி மாற்றம்: சென்னை எழும்பூரிலிருந்து இரவு 11.55 மணிக்கு சேலம் செல்லும் ரயில் எண்( 22153), ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை எழும்பூரிலிருந்து புறப்படாமல், சென்னை கடற்கரையிலிருந்து புறப்பட்டு அரக்கோணம் வழியாக, செங்கல்பட்டு, விழுப்புரம்,சேலத்திற்கு புறப்படும்.

பகுதியளவு ரத்து: காரைக்குடி-எழும்பூர் இடையே அதிகாலை 5.35 மணிக்கு இயக்கப்படும் பல்லவன் சூப்பர் பாஸ்ட் ரயில், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை காரைக்குடி-செங்கல்பட்டு இடையே வரை மட்டுமே இயக்கப்படும். எழும்பூருக்கு இயக்கப்படாது. மறுமார்க்கமாக எழும்பூர்-காரைக்குடி இடையே இயக்கப்படும் பல்லவன் சூப்பர் பாஸ்ட் ரயில், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை, செங்கல்பட்டிலிருந்து இயக்கப்படும். எழும்பூரிலிருந்து இயக்கப்படாது.

எழும்பூர்-மதுரை இடையே, இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ், ஆகஸ்ட் 1ம் தேதி ஆகஸ்ட் 14ம் தேதி வரை செங்கல்பட்டிலிருந்து மதியம் 2.48 மணிக்கு இயக்கப்படும். மறுமார்க்கமாக காலை 6.40 மணிக்கு மதுரையிலிருந்து-எழும்பூருக்கு புறப்படும், வைகை எக்ஸ்பிரஸ் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும். எழும்பூர்-திருச்சிராப்பள்ளி இடையே இயக்கப்படும் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை செங்கல்பட்டிலிருந்து நள்ளிரவு 12.40 மணிக்கு புறப்படும்,

ஐதராபாத்-தாம்பரம் இடையே சார்மினார் எக்ஸ்பிரஸ் ஆகஸ்ட் 1ம் தேதி 14ம் தேதி வரை தாம்பரத்துக்கு மாற்றாக, சென்னை கடற்கரைக்கு வந்து சேரும். மறுமார்க்கமாக தாம்பரம்-ஹைதராபாத் இடையே இயக்கப்படும் ரயில் ஆகஸ்ட் 1ம் தேதி 14ம் தேதி வரை சென்னை கடற்கரையிலிருந்து மாலை 6.20 மணிக்கு இயக்கப்படும். தாம்பரம்-செங்கோட்டை இடையே இரவு 9 மணிக்கு இயக்கப்படும் ரயில், ஆகஸ்ட் 1,4,6,8,11,13ம் தேதி வரை தாம்பரம்-விழுப்புரம் வரை ரத்து செய்யப்பட்டு, விழுப்புரத்திலிருந்து இரவு 11.15 மணிக்கு செங்கோட்டைக்கு இயக்கப்படும். மறுமார்க்கமாக, செங்கோட்டை- தாம்பரம் இடையே இயக்கப்படும் ரயில் ஆகஸ்ட் 2,5,7,9 மற்றும் 12 ஆகிய தேதிகளில் விழுப்புரம் வரை மட்டுமே இயக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post தாம்பரம் பகுதியில் பராமரிப்பு பணி அந்தியோதயா ரயில் ஆகஸ்ட் 1 முதல் 14ம் தேதி வரை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Antiyothaya ,Southern Railway ,Chennai ,Dinakaran ,
× RELATED இன்று தாம்பரம்-நெல்லை சிறப்பு ரயில் இயக்கம்..!!