- மாவட்ட அளவிலான ரோல் பால் போட்டி
- கோவை மாவட்ட அணி சாம்பியன்
- கோயம்புத்தூர்
- தமிழ்நாடு ரோல் பால் சாம்பியன்ஷிப்
- சென்னை
- மதுரை
- திண்டுக்கல்
- தஞ்சாவூர்
- திருச்சி
கோவை, ஜூலை 26: தமிழ்நாடு ரோல் பால் சாம்பியன்ஷிப் போட்டி கோவையில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோவை, சென்னை, மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அணிகள் பங்கேற்றன. 17 வயதினருக்கான இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் கோவை மாவட்ட அணி நடைபெற்ற அனைத்து லீக் சுற்றிகளிலும் வெற்றி பெற்று கால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
கால் இறுதிப்போட்டியில் தஞ்சாவூர் அணியை கோவை மாவட்ட ஆண்கள் அணி 17-4 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. அரை இறுதிப்போட்டியில் சிவகங்கை அணியை 5-3 என்ற புள்ளிக்கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப்போட்டியில் திண்டுக்கல் அணியை கோவை மாவட்ட அணி 7-4 என்ற புள்ளிக்கணக்கில் வென்று சாம்பியன் கோப்பையை பெற்றது
பெண்கள் பிரிவில், கோவை மாவட்ட பெண்கள் அணி நடைபெற்ற அனைத்து லீக் சுற்றுகளில் வெற்றி பெற்று அரை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
அரை இறுதிப்போட்டியில் திண்டுக்கல் அணியை கோவை மாவட்ட பெண்கள் அணி 10-0 என்ற புள்ளிக்கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் கோவை மாவட்ட பெண்கள் அணி 12-0 என்ற புள்ளிக்கணக்கில் திருச்சி அணியை வென்று சாம்பியன் கோப்பையை பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு தென் இந்திய ரோல் பால் சங்கத்தின் செயலாளர் எம்.பி சுப்பரமணியன், தமிழ்நாடு ரோல் பால் சங்கத்தின் செயலாளர் கோவிந்தராஜ், துணை தலைவர் பிரேம்நாத் மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகசேகர் ஆகியோர் கோப்பைகளையும் கேடயங்களையும் வழங்கினர்.
The post மாவட்ட அளவிலான ரோல் பால் போட்டி கோவை மாவட்ட அணி சாம்பியன் appeared first on Dinakaran.