×

வேதாரண்யத்தில் அதிக பனிப்பொழிவு முல்லைப் பூ சாகுபடி கடும் பாதிப்பு-விவசாயிகள் கவலை

வேதாரண்யம் : வேதாரண்யம் பகுதியில் அதிகம் பனிப்பொழிவு நிலவுவதால் முல்லைப்பூ சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகல் கவலையடைந்துள்ளனர்.நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம், நெய்விளக்கு, ஆயக்காரன்புலம், பண்ணார், ஆதனூர், வாய்மேடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கரில் முல்லைப் பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு சாகுபடி செய்யப்படும் பூக்கள் நாகை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களுக்கும் டன் கணக்கில் அனுப்பி வைக்கப்படுகிறது.இந்நிலையில் வேதாரண்யம் பகுதியில் கடந்த மாதம் பெய்த கனமழையால் பூ விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பெய்யும் கடும் பனிப்பொழிவால் செடிகள் மரத்துப்போய், இலை உதிர்ந்து காணப்படுகிறது. இதனால் முல்லைப் பூ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து, பனிக்காலம் முடிந்த பிறகு ஜனவரி முதல் முல்லைப் பூக்கள் அதிமாக பூக்க துவங்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.கடும் பனிப்பொழிவு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு கிலோ முல்லைப்பூ ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. முல்லைப் பூவிற்கு நல்ல விலை கிடைத்துள்ள நிலையில், பூக்கள் அதிகம் பூக்காததால் விவசாயிகள் கவலையும் அடைந்துள்ளனர்….

The post வேதாரண்யத்தில் அதிக பனிப்பொழிவு முல்லைப் பூ சாகுபடி கடும் பாதிப்பு-விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Tags : Vedaryanam ,Vedaranayam ,Vedaranyam ,Nagai District ,Dinakaran ,
× RELATED வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள்...