×

5,512 மெகாவாட் உற்பத்தி சூரியசக்தி மின் உற்பத்தியில் சாதனை: மின் வாரியம் தகவல்

சென்னை: மரபு சாரா ஆதாரங்கள் மூலம் மின்சார உற்பத்தி செய்ய தமிழ்நாடு அரசு ஆர்வம் காட்டி வருகிறது. சூரிய சக்தி மூலம் ஆண்டு முழுவதும் பெரும்பாலான நாட்களில் மின்சாரம் சீராக உற்பத்தி செய்ய முடியும். இதனால் பலரும் தங்கள் வீடுகள், கடைகள், தொழிற்சாலைகளிலும் மேற்கூரையில் சூரிய தகடுகள் அமைத்து மின் உற்பத்தி செய்து வருகின்றனர். மின் வாரியமும் ஒவ்வொரு ஆண்டும் சூரிய ஒளி மின் ஆற்றலை பெறுவதற்கான முயற்சியில், அதற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. இந்நிலையில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக நேற்று முன்தினம் 512 மெகா வாட் சூரிய சக்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டிருப்பதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ஜூலை 24ம் தேதியன்று 5512 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து, கடந்த மார்ச் 5ம் தேதி அன்று பதிவான 5,398 மெகாவாட் என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளது என்றும், நேற்று முன்தினம் சூரிய சக்தி மூலம் மட்டும் 39.2 மியூ மின் கட்டமைப்பில் சேர்க்கப்பட்டது என்றும் பதிவில் கூறப்பட்டுள்ளது.

The post 5,512 மெகாவாட் உற்பத்தி சூரியசக்தி மின் உற்பத்தியில் சாதனை: மின் வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Electricity Board ,Chennai ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED மழைக்காலத்தில் மின் விபத்துகள் நேராமல் தடுப்பது எப்படி?