×

புதுச்சேரி புதிய டிஜிபியாக ஷாலினி சிங் நியமனம்

புதுச்சேரி: புதுச்சேரி மாநில டிஜிபியாக பணியாற்றிய மனோஜ்குமார் லால் 2023 ஜூன் மாதம் பணியிட மாறுதல் பெற்றதையொட்டி ஜம்மு காஷ்மீரில் பணியாற்றிய னிவாஸ் புதுச்சேரி டிஜிபியாக நியமக்கப்பட்டார். அவர் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வரும் நிலையில், இந்த மாத இறுதியில் பணி ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் புதுச்சேரி மாநில காவல்துறையின் புதிய டிஜிபியாக ஷாலினி சிங் நியமிக்கப்பட்டு உள்ளார். 1996ம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச் ஆன ஷாலினி சிங், தற்போது டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு ஆணையராக பணியாற்றி வருகிறார். வரும் ஆகஸ்ட் 1ம்தேதி முதல் புதுச்சேரி டிஜிபியாக அவர் பதவியேற்க உள்ளார். இதற்கான ஆணையை ஒன்றிய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. ஷாலினியின் கணவர் அனில் சுக்லா மிசோரம் டிஜிபியாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

The post புதுச்சேரி புதிய டிஜிபியாக ஷாலினி சிங் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Shalini Singh ,DGP ,Manoj Kumar Lal ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி மாநில புதிய டிஜிபியாக ஷாலினி சிங் பதவியேற்றார்