×

பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறவுள்ள இடத்தை அமைச்சர்கள் சேகர்பாபு, சக்கரபாணி ஆய்வு..!!

சென்னை: அமைச்சர். சக்கரபாணி, சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடர்பாக அனைத்துத் துறை அரசு அலுவலர்களின் ஒருங்கிணைப்புக் கூட்டம்  நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்.சக்கரபாணி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர். சேகர்பாபு ஆகியோர் தலைமையில் (25.07.2024) பழனி, அருள்மிகு பழனி ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி கூட்டரங்கில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடர்பாக அனைத்துத் துறை அரசு அலுவலர்களின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, வருவாய்த்துறை, திருக்கோயில் நிர்வாகம், நகராட்சி நிர்வாகம், பேலுராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் துறை, சுகாதாரத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, நெடுஞ்சாலைத்துறை, நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை, போக்குவரத்துத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, மின்சார வாரியம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறைகளின் அலுவலர்கள் விவரித்தனர்.

முன்னதாக, அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் மாநாடு நடைபெற உள்ள மைதானத்தை பார்வையிட்டு, மாநாட்டு அரங்கம், உணவுக்கூடம் வாகனங்கள் நிறுத்துமிடம், ஆய்வரங்கம், அறுபடை வீடுகளின் அரங்கங்கள், புகைப்படக் கண்காட்சி, 3டி தொழில்நுட்பத்துடன் கூடிய காட்சி அரங்கம் அமைக்கப்படும் இடங்களை நேரில் பார்வையிட்டு அலுவலர்களுக்கும், பொறியாளர்களுக்கும் அறிவுரைகளை வழங்கினர். இக்கூட்டத்தில் பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் பி. சந்தரமோகன், இ.ஆ.ப., மயிலம் பொம்மபுர ஆதீனம், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பிரதீப், இ.கா.ப., இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்கள் இரா.சுகுமார், இ.ஆ.ப., சி. ஹரிப்ரியா, தலைமை பொறியாளர் பொ.பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ஹா.ஷேக் மொகைதீன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் பா.பாரதி, செ.மாரிமுத்து, ச.இலட்சுமணன், பொ.ஜெயராமன், கோ.செ.மங்கையர்க்கரசி திருக்கோயில் அறங்காவலர்கள் ச.மணிமாறன், கே.எம். சுப்பிரமணியன், ரா.ராஜசேகரன், ஜெ.சத்யா மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

The post பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறவுள்ள இடத்தை அமைச்சர்கள் சேகர்பாபு, சக்கரபாணி ஆய்வு..!! appeared first on Dinakaran.

Tags : Ministers ,Shekharbabu ,Chakrapani ,Muthamil Murugan conference ,Palani ,Chennai ,International Muthamil Murugan Conference ,Chief Minister ,M.K.Stal ,Minister ,Hindu Religious Charities Department ,
× RELATED வெள்ளத்தில் மிதக்கிறது ஆந்திரா,...