×

சென்னையில் ஈ.எஸ்.ஐ மருந்தகங்களில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் ஆய்வு!

சென்னை: சென்னையில் ஈ.எஸ்.ஐ மருந்தகங்களில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் ஆய்வு செய்தார். காலை 7 மணி முதல் சென்னை, கொண்டித்தோப்பு, சூளை பகுதிகளில் அமைந்துள்ள ஈ.எஸ்.ஐ மருந்தகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருந்தகங்களுக்கு வந்த நோயாளிகளிடம் முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறதா எனவும் அமைச்சர் கேட்டறிந்தார். மருத்துவர்கள், பணியாளர்கள் உரிய நேரத்தில் வருகிறார்களா? என்பது குறித்தும் அமைச்சர் கணேசன் ஆய்வு செய்தார்.

 

The post சென்னையில் ஈ.எஸ்.ஐ மருந்தகங்களில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் ஆய்வு! appeared first on Dinakaran.

Tags : Minister ,ESI Dispensaries ,Chennai ,C.V. ,Ganesan ,C.V. Ganesan ,ESI ,Kondithoppu ,Chulai ,ESI Pharmacies ,
× RELATED செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப...