×

மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்க மாநிலம் தழுவிய நுழைவு வாயில் கூட்டம்

 

கரூர், ஜூலை 25: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய நுழைவு வாயில் கூட்டம் நடைபெற்றது.கரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகி சத்தியமூர்த்தி, மண்டல நிர்வாகி ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ஞானசேகர் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு பேசினர். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 63 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், மின்வாரிய அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வரும் பணியாளர்களை உடனடியாக கள உதவியாளராக மாற்றிட வேண்டும். என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டன.

 

The post மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்க மாநிலம் தழுவிய நுழைவு வாயில் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Electricity Board Gangmen Union Statewide Gate Meeting ,Karur ,Tamil Nadu Electricity Board Gangmen's Union ,Karur Power Board ,Sasikumar ,Electricity Board Gangmen's Statewide Gate Meeting ,Dinakaran ,
× RELATED மக்கள்பாதை வழியாக செல்லும்...