×

தீ விபத்து ஏற்பட்டு 3 நாட்களுக்கு பிறகு போர் கப்பலில் கடற்படை வீரர் சடலம் மீட்பு

புதுடெல்லி: மும்பையில் உள்ள கடற்படைத் தளத்தில் மூன்று நாட்களுக்கு முன்பு இந்தியாவின் முன்னணி போர்க்கப்பலான ஐஎன்எஸ் பிரம்மபுத்ராவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதை தொடர்ந்து போர்க்கப்பல் கடுமையாக சேதமடைந்து ஒரு பக்கமாக சாய்ந்தது. இந்த விபத்தில் போர்க்கப்பலில் இருந்த வீரர் சிதேந்திர சிங்கை காணவில்லை.

அவரை தேடும் பணி நடந்தது. நேற்று முன்தினம் கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். இந்த நிலையில் நேற்று மாயமான சிதேந்திர சிங் சடலமாக மீட்கப்பட்டார். அவர் ஜூனியர் மாலுமியாக பணியாற்றினார். அவரது மறைவுக்கு கடற்படை இரங்கல் தெரிவித்துள்ளது. உள்நாட்டிலேயே கட்டப்பட்ட ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா கப்பல் ஏவுகணை போர்க் கப்பல்களில் முதன்மையானது.

The post தீ விபத்து ஏற்பட்டு 3 நாட்களுக்கு பிறகு போர் கப்பலில் கடற்படை வீரர் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Seaman ,New Delhi ,India ,Mumbai ,Dinakaran ,
× RELATED ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கு வழங்கிய ஆம்லெட்டில் கரப்பான் பூச்சி