×

சுவரில் பைக் மோதி வாலிபர் பலி

புதுச்சேரி, ஜூலை 25: புதுச்சேரி கொம்பாக்கம் பாலாஜி நகரை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (54). இவரது மகன் அசோக் (23) அரும்பார்த்தபுரத்தில் உள்ள பேட்டரி கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் அவரது பிறந்தநாளையொட்டி வில்லியனூர் பெரியகோயிலுக்கு செல்வதற்கு இருசக்கர வாகனத்தில் ஒதியம்பேட்டில் உள்ள அவரது நண்பர் கார்த்திக் வீட்டிக்கு சென்றுள்ளார். கார்த்திக் வீட்டின் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக பைக் கட்டுப்பாட்டை இழந்து கார்த்திக் வீட்டின் மதில் சுவரின் மீது வேகமாக மோதியது.

இதில் அசோக் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். பின்னர் அருகிலிருந்த பொதுமக்கள் அசோக்கை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அசோக்கை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து அரிகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அசோக்கின் உடலை பார்த்து கதறி அழுதனர். தொடர்ந்து உடல் பிரேத பரிசோதனை முடிந்து, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிறந்தநாளில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

The post சுவரில் பைக் மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Arikrishnan ,Kombakkam Balaji Nagar, Puducherry ,Ashok ,Arumbarthapuram ,Villianur Periyakoil ,
× RELATED புதுச்சேரி நீதிமன்றத்தில் திருமாவளவன் ஆஜர்..!!