×

சிறுமிகள் கடத்தல் வழக்கு: ஆயுள் தண்டனை குறைப்பு

சென்னை: சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் 3 பேரின் ஆயுள் தண்டனை 10 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மகளிர் சிறப்பு நீதிமன்றம் 2019-ல் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, தண்டிக்கப்பட்ட 15 பேர் மேல்முறையீடு செய்தனர். காவல்துறை விசாரணையில் குறைபாடுகள் உள்ளதாக கூறி சென்னை உயர்நீதிமன்றம் தண்டனையை குறைத்து உத்தரவிட்டது. மேலும், பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளுக்கும் தலா ரூ.3 லட்சம்
இழப்பீட்டு வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

 

The post சிறுமிகள் கடத்தல் வழக்கு: ஆயுள் தண்டனை குறைப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai High Court ,Cuddalore Women's Special Court ,
× RELATED பிகில் திரைப்படத்தின் கதை தொடர்பான...