×

ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

ஒன்றிய அரசு தாக்கல் செய்த நிதிநிலை பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதை கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 25.07.2024 அன்று காலை 10 மணிக்கு அண்ணாசாலை மத்திய தபால் நிலையம் அருகில்கண்டன ஆர்ப்பாட்டம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமையில் நடைபெறுகிறது.

சென்னை மாவட்டச் செயலாளர்கள் பா.கருணாநிதி, எஸ்.கே.சிவா, த.கு.வெங்கடேஷ் வேம்புலி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் உட்பட மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் என முன்னணி தலைவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.

The post ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Communist Party of India ,Tamil Nadu ,CHENNAI ,State Secretary of ,Mutharasan ,Union Government ,
× RELATED 10 ஆண்டுகால விலைவாசி உயர்வை...