×

மீனவர்களை விடுவிக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!!

சென்னை: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். இலங்கை கடற்படை சிறைபிடித்த மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடந்த ஜனவரி முதல் ஜூலை 22 வரை இலங்கை கடற்படையினரால் 250 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை சிறையில் உள்ள 87 மீனவர்கள், 175 படகுகளை விடுவிக்க நடவடிக்கை தேவை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

The post மீனவர்களை விடுவிக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,External Affairs ,Minister ,Chennai ,M.K.Stalin ,External Affairs Minister ,Lankan ,Sri Lankan Navy ,Tamilnadu ,Minister of External Affairs ,
× RELATED ஆசிரியர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து