×

திருமயம் அருகே கல்குவாரியில் 60 அடி பள்ளத்தில் டிராக்டர் பாய்ந்து வாலிபர் பலி

*ஒருவர் காயம்

திருமயம் : திருமயம் அருகே கல்குவாரியில் டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயமமைந்தார்.மதுரை மாவட்டம் மேலூர் பகுதி தேனகுடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அம்மாசி மகன் தினேஷ் (27). அதே பகுதியை சேர்ந்தவர் ஜோதிமணி மகன் விஜய் (23). இருவரும் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மாவூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்குவாரியில் கம்பரசர் டிராக்டர் (பாறை துளையிடும் டிராக்டர்) ஓட்டுனராக பணி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை இருவரும் பணியை முடித்துவிட்டு டிராக்டரில் சென்று கொண்டிருந்தனர். டிராக்டரை தினேஷ் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது மாவூர் பகுதியில் பயனற்று கிடந்த கல்குவாரி அருகே டிராக்டர் சென்றபோது எதிர்பாராத விதமாக டிராக்டர் ஓட்டுநர் கட்டுப்பாட்டு இழந்து சுமார் 60 அடி கல்குவாரி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் டிராக்டர் சுக்கு நூறாக நொறுங்கியது.

இதில் டிராக்டரில் இருந்த தினேஷ் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல் விஜய் பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். மேலும் உயிரிழந்த தினேஷ் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனிடையே விபத்து குறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருமயம் அருகே கல்குவாரியில் 60 அடி பள்ளத்தில் டிராக்டர் பாய்ந்து வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Kalquari ,Tirumayam ,Thirumayam ,Ammasi ,Dinesh ,Thenakutipatti ,Melur ,Madurai district ,Jyothimani ,
× RELATED திருமயம் அருகே திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்