×

நேபாளத்தில் 19 பேருடன் சென்ற விமானம் விழுந்து விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்

காட்மாண்டு: நேபாள தலைநகர் காட்மாண்டு அருகே 19 பேருடன் சென்ற பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது. காத்மாண்டு விமான நிலையத்தில் இருந்து 19 பயணிகளுடன் விமானம் ஒன்று புறப்பட்டது. காட்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியது. ஓடுதளத்தில் சென்றபோதே கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுபாதையில் சறுக்கி விபத்துக்குள்ளானது.

ஓடுபாதையில் சறுக்கி விபத்துக்குள்ளான விமானம் தீப்பிடித்து எரிவதால் பரபரப்பு நிலவி வருகிறது. விமானத்தில் இருந்த 19 பேரின் நிலை என்ன என்பது குறித்து தகவல் எதுவும் இல்லை. தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விமான விபத்தை அடுத்து காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

The post நேபாளத்தில் 19 பேருடன் சென்ற விமானம் விழுந்து விபத்து: மீட்பு பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Nepal ,Kathmandu ,Katmandu ,Kathmandu Airport ,Sauria Airlines ,Kathmandu Tribuan International Airport ,
× RELATED நேபாள பஸ் விபத்தில் பலியான 25 இந்தியர்களின் உடல் விமானம் மூலம் வந்தது