×

மாநில சிறுபான்மை நல ஆணையத்தின் புதிய தலைவராக ஜோ அருண் நியமனம்

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: மாநில சிறுபான்மை நல ஆணையத்தின் தலைவராக 3 ஆண்டுகளாக இருந்து வந்த பீட்டர் அல்போன்ஸ் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் சிறுபான்மை நல ஆணையத்தை திருத்தி அமைத்து தற்போது புதிய தலைவராக ஜோ அருண் நியமனம் செய்யப்படுகிறார்.

அதேபோல், துணை தலைவராக எம்.எம்.அப்துல் குத்தூஸ் உட்பட 8 உறுப்பினர்கள் என ஒட்டுமொத்தமாக 10 பேர் கொண்ட குழு நியமனம் செய்யப்படுகின்றனர். இதுபோல, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் தலைவராக பெர்னாண்டஸ் ரத்தின ராஜாவை நியமனம் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.

The post மாநில சிறுபான்மை நல ஆணையத்தின் புதிய தலைவராக ஜோ அருண் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Joe Arun ,State Minority Welfare Commission ,Chennai ,Government of Tamil Nadu ,Peter Alphonse ,Minority Welfare Commission ,
× RELATED ஹாரன் ஒலி அதிகரித்தால் சிவப்பு...