×

திருச்செந்தூர் அருகே பள்ளி வாகனம் – பைக் நேருக்குநேர் மோதி விபத்து

*இருவர் பரிதாப பலி

திருச்செந்தூர் : திருச்செந்தூர் அருகே பள்ளி வாகனம் – பைக் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.திருச்செந்தூர் அருகே நத்தக்குளத்தை சேர்ந்தவர் லிங்கம் (48), விவசாயி. அம்மன்புரம் திருவள்ளுவர் மேலத்தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகன் ரமேஷ் (26), டிரைவர். இவர்கள் இருவரும் நேற்று மாலை ஒரே பைக்கில் திருச்செந்தூர் – நெல்லை சாலையில் வள்ளிவிளை விலக்கு அருகே சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திருச்செந்தூர் நோக்கி வந்த தனியார் பள்ளி வாகனமும், பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் லிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ரமேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்செந்தூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விபத்து குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து பள்ளி வாகன டிரைவரான காயல்பட்டினத்தை சேர்ந்த பாண்டியன் மகன் ஜெகதீஷ் (31) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விபத்தில் பலியான லிங்கத்திற்கு மனைவி, 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். ரமேசுக்கு திருமணமாகவில்லை.

The post திருச்செந்தூர் அருகே பள்ளி வாகனம் – பைக் நேருக்குநேர் மோதி விபத்து appeared first on Dinakaran.

Tags : Tiruchendur ,Lingam ,Nattakulam ,Murugesan ,Ramesh ,Ammanpuram Thiruvalluvar Meleteru ,
× RELATED தூத்துக்குடி – திருச்செந்தூர்...