×

ரூ.7.6 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கல்

 

சிவகங்கை, ஜூலை 23: சிவகங்கை கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று, மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, புதிய ரேசன் கார்டுகள், உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 490 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு கலெக்டர் ஆஷாஅஜித் அறிவுறுத்தினார்.

மேலும் இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலவாரிய திட்டத்தின் கீழ் இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை 20 மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திற்கு தலா ரூ.17 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.3,40,000 உள்ளிட்ட மொத்தம் 26 பயனாளிகளுக்கு ரூ.7,62,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அரசுத்துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post ரூ.7.6 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,People's Grievance Redressal Day ,Sivagangai Collector ,
× RELATED மக்கள் குறைதீர் கூட்டம்