×

மக்கள் குறைதீர் கூட்டம் 457 மனுக்கள் குவிந்தன

 

அரியலூர், ஜூலை23: அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 457 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் மூலம் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post மக்கள் குறைதீர் கூட்டம் 457 மனுக்கள் குவிந்தன appeared first on Dinakaran.

Tags : People's Grievance Meeting ,Ariyalur ,People's Grievance Redressal Day ,Ariyalur District Collector ,District Collector ,Rathnaswamy ,Dinakaran ,
× RELATED பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு வாகன பிரசாரம்