×

வெங்கமேடு அருகே தாய் இறந்த துக்கத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

 

கரூர், ஜூலை 23: கரூர் வெங்கமேடு அருகே தாய் இறந்த துயரத்தில் இருந்து வந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.கரூர் வெங்கமேடு பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் சகாய சந்தோஷ்(21). இவரது தாயார் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதாக கூறப்படுகிறது.இதனால், விரக்தியடைந்த மனநிலையில் இருந்து வந்த இவர், கடந்த 20ம்தேதி வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் புகாரின் பேரில், வெங்கமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

The post வெங்கமேடு அருகே தாய் இறந்த துக்கத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Vengamedu ,Karur ,Old Post Office Street ,
× RELATED கரூரில் சேதமடைந்துள்ள நிழற்குடைகள் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை