×

பெண்ணிடம் 6 சவரன் தாலி செயின் பறிப்பு

பள்ளிப்பட்டு, : திருத்தணி ஒன்றியம் புச்சிரெட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி(49). நெசவு தொழிலாளி. இவரது மனைவி சுந்தரி(40). இந்த தம்பதிகள் நேற்றுமுன்தினம் அம்மையார் குப்பத்தில் அவர்களது உறவினர் இல்ல துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு அன்று மாலை இருசக்கர வாகனத்தில் வீடு திரும்ப கொண்டிருந்தனர்.

அப்போது, ஜி.பி.ஆர். கண்டிகை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே வந்து கொண்டிருந்தபோது அவர்களை பைக்கில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர் சுந்தரி கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தங்க தாலி செயின் பறித்து கொண்டு அங்கிருந்து கண் இமைக்கும் நேரத்தில் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து சுப்பிரமணி பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறி திருடர்களை தேடி வருகின்றனர்.

The post பெண்ணிடம் 6 சவரன் தாலி செயின் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Pallipatta ,Subramani ,Buchirettipalli ,Tiruthani Union ,Sundari ,Ammaiyar Kuppa ,
× RELATED நெல்லிக்குப்பம் அருகே பரபரப்பு பைக்...