×

3வது ஆண்டாக சிறந்த பயண ஏற்பாட்டாளர்களுக்கு விருதுகள்: சுற்றுலாதுறை அறிவிப்பு

சென்னை: மூன்றாவது ஆண்டாக சிறந்த பயண ஏற்பாட்டாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என தமிழக சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில்: சுற்றுலாவில் வெற்றியாளர்கள், பயண ஏற்பாட்டாளர்கள் மற்றும் புதிய உத்திகளை கையாள்பவர்களுக்கு தமிழக சுற்றுலாத்துறை சுற்றுலா விருதுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மூன்றாவது ஆண்டாக வழங்கப்படும் இவ்விருதுகள் ஆண்டுதோறும் உலக சுற்றுலா தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக வரும் 27ம் தேதி வழங்கப்படவுள்ளன. இவ்விருதுகள் சுற்றுலா தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கவும், மாநிலத்தில் பல்வேறு சுற்றுலா பங்குதாரர்களிடையே சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கத்துடனும் வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு ‘‘உலக சுற்றுலா தினத்தன்று” விருதுகள் வழங்கப்படும். விருதுகளுக்கான விண்ணப்பத்தினை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் உள்ள உரிய படிவத்தில் பூர்த்தி செய்து 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post 3வது ஆண்டாக சிறந்த பயண ஏற்பாட்டாளர்களுக்கு விருதுகள்: சுற்றுலாதுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu Tourism Department ,Tamil Nadu Department of Tourism ,Dinakaran ,
× RELATED சுற்றுலா தொழில் முனைவோர் விருது பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு