×

உடலுறுப்பு தானம் செய்தவருக்கு அரசு சார்பில் மரியாதை

சென்னை: துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த ஆனந்த் என்பவரின் மகன் சூர்யா (25), கடந்த 16ம் தேதி, விபத்தில் படுகாயமடைந்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டு, கடந்த 17ம் தேதி இறந்தார். முன்னதாக, சூர்யாவின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.

இதையடுத்து, சூர்யாவின் நுரையீரல் மற்றும் கல்லீரல் ஆகிய உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. அவரது உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் தெற்கு சென்னை வருவாய் கோட்ட அலுவலர், சோழிங்கநல்லுார் சிறப்பு வட்டாட்சியர் ஜெகஜீவன்ராம் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். நிகழ்வில் தெற்கு சென்னை வருவாய் கோட்ட அலுவலர் பி.பாபு, சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர், காவல் துறையினர் உடன் இருந்தனர்.

The post உடலுறுப்பு தானம் செய்தவருக்கு அரசு சார்பில் மரியாதை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Surya ,Anand ,Dharippakkam Kannagi ,
× RELATED சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில்...