சென்னை: ஈக்காட்டுதாங்கல் காசி திரையரங்கம் அருகே அடையாறு ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை, இங்கு வந்த வாலிபர் ஒருவர் போதையில் தள்ளாடியபடி மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர் மீது ஏறி, திடீரென அடையாறு ஆற்றில் குதித்தார். ஆற்றில் தண்ணீர் இல்லாததால் சேறும் சகதியுமாக இருந்தால் அந்த வாலிபர் சேற்றுக்குள் சிக்கி சிறிது நேரத்தில் மாயமானார்.
இதை பார்த்த வாகன ஓட்டிகள் உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சேற்றில் சிக்கி மாயமான வாலிபரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், நீண்ட நேரமாகியும் கிடைக்கவில்லை. தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
The post அடையாறு ஆற்றில் குதித்து வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.