×

இனி காலை 9.30 மணிக்கு பேரவை கூட்டம் தொடங்கும்;விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் வழக்கமாக காலை 10 மணிக்கு தொடங்கும். கடந்த மாதம் பேரவை கூட்டத்தொடர் காலை 10 மணிக்கு பதிலாக 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு முடிந்தது. மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடந்தது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை யொட்டி கூட்டத்தொடரை விரைவாக முடிக்க இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டது. இதற்காக தமிழ்நாடு சட்டமன்ற விதிகள் குழுவில் முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான அறிவிப்பை சமீபத்தில் சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு முறைப்படி அறிவித்து விதிகளில் திருத்தம் கொண்டு வந்தார்.

தமிழக சட்டசபை விதிகள் குழுவில் கொண்டு வரப்பட்ட திருத்தம் அப்படியே நீடிப்பதால் இனி வரும் காலங்களில் சட்டப்பேரவை கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கலைஞர் முதல்வராக இருந்த கால கட்டத்தில் சட்டப்பேரவை கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்குவது வழக்கம். பின்னர் ஜெயலலிதா முதல்வரான பிறகு காலை 10 மணிக்கு பேரவை கூட்டம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

The post இனி காலை 9.30 மணிக்கு பேரவை கூட்டம் தொடங்கும்;விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu Legislative Assembly ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல்லில் சிறப்பு மாநாடு