×

பெண்ணிடம் செயின் பறித்த கொள்ளையர்கள் கைது

தர்மபுரி, ஜூலை 20: காரிமங்கலம் அடுத்துள்ள பொம்மள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாதையன் மனைவி திலகம் (42), நார் மில்லில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 13ம் தேதி, டூவீலர் நார் மில்லில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது டூவீலரில் வந்த வந்த 2 வாலிபர்கள், திலகம் கழுத்தில் இருந்த 7 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்து திலகம் அளித்த புகாரின் பேரில், காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் பாலக்கோட்டை சேர்ந்த அர்ச்சுனன் (28), கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த வேடியப்பன் (37) ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். அர்ச்சுனன், வேடியப்பன் ஆகியோர் மீது காரிமங்கலம், மதிகோண்பாளையம், தர்மபுரி டவுன் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில், வழிப்பறி வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

The post பெண்ணிடம் செயின் பறித்த கொள்ளையர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Mathayan ,Thilgam ,Bommalli ,Karimangalam ,Nar Mill ,Duweiler Nar Mill ,Duweiler ,Dinakaran ,
× RELATED தருமபுரி தனியார் பள்ளியில்...