×

பர்கூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை


கிருஷ்ணகிரி: பர்கூரில் கடன் பிரச்சினையால் தாய் உஷா(37), மகள்கள் நிவேதா (16), சர்மிளா (13), ஆகிய மூன்று பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பர்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிவேதா பிளஸ் 2, ஷர்மிளா எட்டாம் வகுப்பு பயின்று வந்தனர். கடன் பிரச்சனை காரணமாக, இன்று காலை ஏற்பட்ட தகராறில், ஆத்திரம் அடைந்த உஷாவின் கணவர்,

ரமேஷ் (42), தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், இவர்கள் மூன்று பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வீட்டை விட்டு வெளியேறிய ரமேஷை, போலீசார் மற்றும் உறவினர்கள் தேடி வருகின்றனர்.

The post பர்கூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Parkur ,Krishnagiri ,Usha ,Niveda ,Sharmila ,Barkur ,Nivetha ,Plus ,Parkur Government Girls High School ,Dinakaran ,
× RELATED மாணவிகள் பாலியல் பலாத்கார விவகாரம்...