×

புதுவயலுக்கு தீயணைப்பு நிலையம் முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

 

காரைக்குடி, ஜூலை 19: காரைக்குடி அருகே புதுவயல் பேரூராட்சி கூட்டம் அதன் தலைவர் முகம்மது மீரா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் பகுருதீன் அலிபாய், செயல் அலுவலர் உமாமகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் அபுபக்கர் சித்திக், ஆராயி, அமுதசுந்தரி, எமிஜெபராணி, வாசுகி, சரண்யா, நல்லமுத்து, செல்வா, பூரணிமாதேவி, சாகுல் ஹமீது, உஷா, கரு.நாச்சியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், வரவு, செலவு திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு உள்பட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பேரூராட்சி தலைவர் உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் தேவைக்கு ஏற்ப முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றப்பட்டு வருகிறது, என்றார். துணைத்தலைவர் பகுருதீன் அலி பாய் பேசுகையில், புதுவயல் பேரூராட்சிக்கு தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் என அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கு உறுதுணையாக இருந்த அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், எம்எல்ஏ மாங்குடி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம், என்றார்.

The post புதுவயலுக்கு தீயணைப்பு நிலையம் முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Fire Station ,Puduwayal ,Karaikudi ,Puduwayal Baruradi ,Mohammad Meera ,Vice President ,Purgrudin Alibai ,Executive Officer ,Umamakeswaran ,Metropolitan Councillors ,Abubakar Siddiq ,Aarai ,Fire Station for Puduwayal ,Dinakaran ,
× RELATED மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த...