×

அக்கா-தங்கை தூக்குப்போட்டு தற்கொலை

சின்னசேலம்: சின்னசேலம் அருகே வயது முதிர்ந்த அக்கா, தங்கை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். சின்னசேலம் அருகே ராயப்பனூரை சேர்ந்தவர் வினோத்(40), விவசாயி. இவருடன் தாய் பழனியம்மாள்(62), பெரியம்மா செல்லம்மாள்(73) ஆகியோரும் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் ஆடி 1ம் தேதி குடும்பத்தோடு தேங்காய் சுட்டு சாப்பிட்டுவிட்டு இரவு 11 மணியளவில் தூங்க சென்றனர்.

நேற்று காலை வெகு நேரமாகியும் தாயும் பெரியமாவும் எழுந்து வராததால் வினோத் தேடியுள்ளார். அப்போது வீட்டின் முன் உள்ள தகர கொட்டகையில் இருவரும் தனித்தனி சேலையில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளனர். இதுகுறித்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து, அவர்களின் தற்கொலைக்கான காரணம் குறித்து குடும்பத்தினரிடம் விசாரித்து வருகின்றனர்.

The post அக்கா-தங்கை தூக்குப்போட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Chinnasalem ,Vinod ,Raiappanur ,Palaniammal ,Periamma Chellammal ,
× RELATED சின்னசேலம் அருகே நண்பரின் மனைவியை...