×

இலங்கை கடற்படை சிறைபிடித்த 22 மீனவர்களின் காவல் நீட்டிப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 22ம் தேதி கடலுக்கு சென்ற 3 விசைப்படகுகளையும், அதில் இருந்த 22 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்தது. பின்னர் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் நேற்று 3வது முறையாக மீண்டும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 24ம் தேதி வரை அவர்களின் சிறைக்காவலை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மீனவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும், ராமேஸ்வரம் மீனவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர்.

The post இலங்கை கடற்படை சிறைபிடித்த 22 மீனவர்களின் காவல் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Sri Lankan Navy ,Rameswaram ,Jaffna Jail ,Dinakaran ,
× RELATED தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு