×

வல்லக்கோட்டை முருகன் கோயில் அறங்காவலர்கள் பதவியேற்பு

ஸ்ரீ பெரும்புதூர்: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் அறங்காவலர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீ பெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை கிராமத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு வல்லக்கோட்டை செந்தில்தேவராஜ், கலைச்செல்வி, விஜயகுமார், மோகனகிருஷ்ணன், செல்வகுமரன் ஆகிய 5 பேரை, அறங்காவலர்களாக நியமித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதன்படி, அரசால் நியமனம் செய்யப்பட்ட அறங்காவலர்கள் நேற்று காலை பதவியேற்கும் நிகழ்ச்சி கோயிலில் நடைபெற்றது. காஞ்சிபுரம் உதவி ஆணையர் கருணாநிதி, அறநிலையத்துறை ஆய்வர் திலகவதி, கோயில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் சுவாமி முன்னிலையில், 5 பேரும் உறுதியேற்று அறங்காலர்களாக பதவியேற்றனர். பின்னர், அறங்காவலர் குழு தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில், அறங்காவலர் குழு தலைவராக செந்தில்தேவராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி தலைவர் படப்பை மனோகரன், திமுக ஒன்றிய செயலாளர் கோபால், மாவட்ட கவுன்சிலர் ராமமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் கணேஷ்பாபு மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டு, அறங்காவலர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

 

The post வல்லக்கோட்டை முருகன் கோயில் அறங்காவலர்கள் பதவியேற்பு appeared first on Dinakaran.

Tags : Vallakottai Murugan Temple Trustees ,Sri Perumbudur ,Vallakottai Murugan Temple ,Sri Subramania Swamy Temple ,Vallakottai village ,Sri Perumputur, Kanchipuram district ,Vallakottai ,Senthildevaraj ,Kalachelvi ,Vijayakumar ,Mohanakrishnan ,Selvakumaran ,
× RELATED 400 அடி டவர் மீது ஏறி சுற்றுச்சூழல்...